எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆடம் ஆர். ஹோல்ஸ்கட்டுரைகள்

விடாமுயற்சியின் வல்லமை

1917 ஆம் ஆண்டில், ஒரு இளம் பெண் தையல்காரர் நியூயார்க் நகரத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு பள்ளி ஒன்றில் சேர்க்கை கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். ஆனால் ஆன்கோன் என்னும் அவள், வகுப்புகளுக்கு பதிவுசெய்ய வந்தபோது, அந்த பள்ளியின் இயக்குனர் அவளை வரவேற்கவில்லை என்று கூறிவிட்டார். மேலும் “நேரடியாய் சொல்லவேண்டுமானால், நீங்கள் ஒரு கருப்பினத்தை சேர்ந்த பெண் என்பது எங்களுக்கு தெரியாது” என்று கூறி வெளிப்படையாய் நிராகரித்தார். ஆனால் அவள் வெளியேற மறுத்து “தயவுசெய்து என்னை இங்கேயே இருக்க விடுங்கள்” என்று மனதிற்குள் ஜெபித்தாள். அவளது விடாமுயற்சியைக் கண்டு, பள்ளியின் இயக்குனர் அவள் சேர்ந்துகொள்வதற்கு அனுமதித்தார். ஆனால் வெள்ளையர்களுக்கு மட்டுமேயான வகுப்பறையிலிருந்து பின் கதவைத் திறந்து அவளைப் பிரித்து தனித்து உட்காரச்செய்து வகுப்பை கவனிக்கச் செய்தார்.

ஆனின் திறமையினால், அந்த பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன்பே பட்டம் பெற்று வெளியேறினார். மேலும் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜாக்குலின் கென்னடி உட்பட உயர் சமூக வாடிக்கையாளர்களை தன் திறமையினால் வெகுவாய் கவர்ந்தார். அவர்களுடைய உலகப் புகழ்பெற்ற திருமண ஆடையையும் இவரே வடிவமைத்தார். அவருடைய தையல் ஸ்டுடியோவுக்கு மேலே ஒரு குழாய் வெடித்து, முதலில் வடிவமைக்கப்பட்ட ஆடையை சிதைத்தபின்பு தேவனுடைய உதவியை நாடிய அவள் மீண்டும் நேர்த்தியாய் இரண்டாம் ஆடையை வடிவமைத்தார்.

அந்த விடாமுயற்சி சக்தி வாய்ந்தது. குறிப்பாய் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். விடாமுயற்சியுடன் செயல்பட்ட விதவையைக் குறித்து இயேசுவின் உவமையில், அவள் அநீதியனான நீதிபதியிடம் நீதிகேட்டு போராடுகிறாள். முதலில், அவன் அவளை மறுத்தான். ஆனால் “இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால்... இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும்” (லூக்கா 18:5) என்று சொன்னான்.

அதேபோன்று, “தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” (வச. 7). அவர் நிச்சயமாய் செய்வார் (வச. 8) என்று இயேசு சொல்லுகிறார். அவருடைய ஊக்கப்படுத்தலோடு, விடாமுயற்சியுடன் தொடர்ந்து ஜெபத்தில் மன்றாடுவோம். தேவன் தன்னுடைய குறித்த நேரத்தில், நேர்த்தியான வழியில் பதில் செய்வார்.

சதாகாலமும் உண்மையுள்ள தேவன்

சேவியர், தொடக்கப் பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் அவனைப் பள்ளிக்குக் கூட்டிவந்து கூட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள், திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. நான் அவனை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக செல்வதற்கு தாமதமாகிவிட்டது. நான் காரை நிறுத்திவிட்டு, ஜெபித்துக்கொண்டே அவனுடைய வகுப்பறையை நோக்கி ஓடும்போது, அவன் ஆசிரியையின் அருகாமையில் அமர்ந்துகொண்டு அவனுடைய பையை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். “மிஜோ, என்னை மன்னித்துவிடு; நீ நன்றாய் இருக்கிறாயா?” என்று கேட்க, அவன் பெருமூச்சுடன், “நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் ஏன் தாமதமாய் வந்தீர்கள்?” என்று என்னை கடிந்துகொண்டான். நான் என் மகனை அதிகமாய் நேசிக்கிறேன், ஆகிலும் அவனை சில விஷயங்களில் சலிப்படையச் செய்திருக்கிறேன். அவன் ஒரு நாளில் தேவனோடும் சலிப்படைய நேரிடும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் தேவன் ஒருபோதும் தான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்னும் சத்தியத்தை அவனுக்கு விளங்கச்செய்வதற்கு தொடர்ந்து பிரயாசப்படுகிறேன்.

சங்கீதம் 33, தேவனின் நம்பத்தன்மையை மகிழ்ச்சியான துதிகளுடன் கொண்டாட நம்மை ஊக்குவிக்கிறது (வச. 1-3). ஏனெனில் “கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது” (வச. 4). தேவன் படைத்த உலகத்தை அவரது வல்லமை மற்றும் நம்பகத்தன்மையின் உறுதியான சான்றாகப் பயன்படுத்தி (வச. 5-7), பூமியெங்கும் இருக்கும் மக்களுக்கு சங்கீதக்காரன் அழைப்பு விடுக்கிறார் (வச. 8).

திட்டங்கள் தோல்வியடையும்போதோ அல்லது மக்கள் நம்மை தாழ்மைபடுத்தினாலே நாம் தேவனிடத்தில் சலிப்படைய நேரிடுகிறது. ஆயினும் தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாம் நம்பலாம். ஏனெனில், “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாக” (வச. 11) நிற்கக்கூடியது. காரியங்கள் நமக்கு சாதகமாய் நடக்காவிட்டாலும் நாம் தேவனை துதிக்க பழகலாம். ஏனெனில் நம்முடைய அன்பான சிருஷ்டிகர் எல்லோரையும் எல்லாவற்றையும் தாங்கிப் பாதுகாக்கிறார். தேவன் சதாகாலமும் உண்மையுள்ளவர்.

நம் எல்லா நாட்களின் தேவன்

ஒரு வெற்றியடையாத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஜோனின் மருத்துவர் ஐந்து வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். நேரம் செல்ல செல்ல, பதட்டம் உருவானது. ஜோனும் அவரது கணவரும் வயதுசென்றவர்கள். அவர்களது குடும்பம் வெகு தொலைவில் வசித்து வந்தது. அவர்கள் இனி புதிய இடத்திற்கு செல்லவேண்டும். சிக்கலான மருத்துவமனை அமைப்பிற்கு செல்ல வேண்டும். மற்றொரு புதிய மருத்துவரை அவர்கள் சந்திக்கவேண்டும்.

இந்த சூழ்நிலைகள் அவர்களை மேற்கொண்டாலும், தேவன் அவர்களை பாதுகாத்தார். அவர்கள் காரில் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு வழிகாட்டும் ஜீ.பி.எஸ் சிஸ்டம் தோல்வியடைந்தது. ஆனால் அவர்களிடம் வழிகாட்டும் மேப் பேப்பரில் கைவசம் இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேரமுடிந்தது. தேவன் அந்த ஞானத்தை அவர்களுக்கு அருளினார். அந்த மருத்துவமனையில் ஒரு கிறிஸ்தவ போதகர் அவர்களுக்காக ஜெபம் செய்து, மீண்டும் அன்றைக்கு மாலையில் அவர்களுக்கு உதவிசெய்தார். தேவன் அவர்களுக்கு உதவி அருளினார். அந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, அது நல்ல முறையில் நடத்தேறியது என்னும் நற்செய்தியையும் ஜோன் கேள்விப்பட்டார்.

நாம் எல்லா நேரத்திலும் சுகத்தையும் மீட்டையும் பெற்றுகொள்ளாவிட்டாலும், இளைஞரோ முதியவரோ, தேவன் பெலவீனமான அனைவரோடும் எப்போதும் இருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பாபிலோனின் சிறையிருப்பு இஸ்ரவேலர்களைப் பலவீனப்படுத்தியபோது, தேவன் அவர்களைப் பிறப்பிலிருந்தே ஆதரித்தார் என்றும் அவர்களைத் தொடர்ந்து பாதுகாப்பார் என்றும் ஏசாயா அவர்களுக்கு நினைப்பூட்டினார். “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்” (ஏசாயா 46:4) என்று தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

தேவனுடைய தேவை நமக்கு அவசியப்படும்போது, அவர் நம்மை கைவிடுவதில்லை. அவர் நம் தேவைகளை சந்தித்து, நம்முடைய ஜீவியத்தின் அனைத்து பகுதிகளிலும் நம்மோடிருக்கிறார் என்பதை நமக்கு நினைப்பூட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் எல்லா நாட்களிலும் நம்முடைய தேவன்.

நாம் அவருடையவர்கள்

நாம் அவருடையவர்கள் தேவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தத்தெடுப்பு உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை என்று நினைத்தாலும், தத்தெடுப்பு என்று ஒன்றிருக்கிறது. ஒரு வகையில், நாம் ஒவ்வொருவரும் அனாதையாகத்தான் இருக்கிறோம்.

லோரிலி கிராக்கர் தத்தெடுப்பு பற்றிய தனது ஆழ்ந்த தனிப்பட்ட கதையைப் பகிர்ந்து கொள்ளும்போது, நாம் ஒவ்வொருவரும் வியக்கத்தக்க நடைமுறை பயன்பாடுகளைப் பெற முடியும். கிராக்கரைத் தத்தெடுத்தவர் இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாயும், அனாதை இதயம் கொண்ட இளவரசி ஃபோபியின் வளர்ப்புத் தாயுமாவாள்.

கிராக்கர் தத்தெடுப்பை உள்ளார்ந்த "ஆன்மீக முயற்சியாக" பார்க்கிறார். "அனாதைகள்" நம்மைச் சுற்றிலும் உள்ளனர்.…

தேவ பிரசன்னத்தின் முக்கியத்துவம்

2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு, இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில், திறன் மற்றும் நினைவக பயிற்சிகளுக்கு இடையில் ஏற்படும் மாறுதலைக் குறித்து ஆய்வுமேற்கொண்டனர். ஆச்சரியவிதமாக, ஒரே நேரத்தில் பல திறமைகளை வெளிப்படுத்தமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்களைக் காட்டிலும் ஒரே நேரத்தில் ஒரே திறனை வெளிப்படுத்துகிறவர்கள் சிறப்பானவர்களாய் செயல்பட்டுள்ளனர். பல்திறனாளிகள் தங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும், தேவையற்ற தகவல்களை அப்புறப்படுத்துவதற்கும் சிரமப்படுகின்றனர். நம்முடைய மனது சிதறும்போது, அவற்றை ஒருமுகப்படுத்துவது என்பது சவாலாய் அமைகிறது.

இயேசு மரியாள் மற்றும் மார்த்தாள் வீட்டிற்குச் சென்றபோது, மார்த்தாள் மும்முரமாக பற்பல வேலைகளை செய்துகொண்டிருந்தாள் (லூக்கா 10:40). அவளது சகோதரியாகிய மரியாளோ, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய போதனைகளை கேட்பதின் மூலம் என்றுமே தன்னைவிடட்டு எடுபடாத ஞானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்தாள். (வச. 39-42). மார்த்தாள், மரியாளை தனக்கு உதவி செய்ய அனுப்பும்புடிக்கு இயேசுவிடம் கேட்டபோது, அவர்;, “மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” (வச. 41:42).

நாம் தேவன் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் மார்த்தாளைப் போன்று நாம் அநேக காரியங்களைக் குறித்து சிந்தித்து திசைதிருப்பப்படுகிறோம். நமக்கு தேவையான ஞானத்தையும் நம்பிக்கையையும் தேவனால் மட்டுமே நமக்கு அருளமுடியும் என்று தெரிந்தும், தேவனுடைய பிரசன்னத்தை நாம் புறக்கணிக்கிறோம். நாம் ஜெபத்தின் மூலமாகவும் வேதவாசிப்பின் மூலமாகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்போமாகில், நாம் நம்முடைய வாழக்;கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர் நமக்கு வழியையும் பெலனையும் கொடுக்கிறார்.

அடைக்கல மக்கள்

பில் மற்றும் சாண்டி, அகதிக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்து அதில் இருவரை தங்களுடைய வீட்டில் தங்கவைத்துக்கொள்ள மனம்திறந்தனர். அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த பிறகு, அவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்று அமைதியாய் யோசித்தனர். அவர்கள் இங்கே தங்குவதற்கு மனரீதியாய் ஆயத்தமாய் இருக்கிறார்களா? அவர்களுடைய மொழி, கலாச்சாரங்கள் ஆகியவைகள் வேறு என்றாலும், அவர்கள் இந்த விலைமதிப்பற்ற குழந்தைகளுக்கு அடைக்கலமான மக்களாக மாறினார்கள்.

ரூத்தின் கதையைக் கேட்டு போவாஸ் நெகிழ்ச்சியடைந்தார். அவள் தன்னுடைய சொந்த ஜனத்தை விட்டுவிட்டு, நகோமிக்கு ஆதரவாய் செயல்படுவதற்கு முன்வந்த கதையைக் கேள்விப்பட்டு, போவாஸ் “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” (ரூத் 2:12) என்று அவளுக்காக ஜெபித்து அவளை ஆசீர்வதித்தான்.

ஒரு நாள் இரவில் ரூத் போவாஸ_டைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவனுடைய ஆசீர்வாதத்தை அவனுக்கு நினைப்பூட்டுகிறாள். தன் கால்களில் ஏதோ ஒருவகையான அசைவை உணர்ந்த போவாஸ் “நீ யார்” என்று கேட்கிறான். அதற்கு ரூத், “நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்” (3:9).

வஸ்திரத்தின் ஓரம் என்பதற்கும் செட்டைகள் என்பதற்கும் எபிரெயம் ஒரே வார்த்தையையே பயன்படுத்துகிறது. போவாஸ் ரூத்தை மணந்துகொள்வதின் மூலம் அவளை சுதந்தரவாளியாக்குகிறான். அவர்களுடைய கொள்ளுபேரனாகிய தாவீது அந்த கதையை தன்னுடைய பாடலில் பரதிபலிக்கிறான்: “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங்கீதம் 36:7).

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

தேவனோடு ஆழமான உறவை வளர்ப்பது எப்படி!

நாம் தனிமையில் இருக்கும்போது நமது பாரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அல்லது ஆறுதல்படுத்தப்படவும் யாரேனும் ஒருவர் நம் இதயத்தில் உள்ளதை இயேசுவிடம் சொல்வதை விரும்புகின்றோம். ஆனால் நாம் எப்படி இயேசுவின் நண்பர்களாக இருக்கிறோம் என்பதைப் பற்றி எத்தனை முறை நினைக்கின்றோம்? அவரிடமிருந்து பெற்றுக்கொள்வது என்ற மேலோட்டமான உறவைத் தாண்டி அவருடன் அந்த ஆழமான நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது எப்படி?

எல்லா சூழ்நிலைகளிலும், கைகளைத்தட்ட இரண்டு கைகள் தேவை. தேவனை ஒர் பரிபூரணமான, நிலையான நண்பராக எண்ணி நாம் வளரும்போது, அவருடன் இன்னும் ஆழமாக வளர்வது…

பாவ அறிக்கை

“அதை மறைக்க கூடாது” என வின்ஸ்டனுக்குத் தெரியும். எனவே அவன் ஒரு தந்திரமான யுக்தியைக் கையாண்டான்.  "தந்திரமாக மறைப்பது" என்று அதைப் பற்றிக் கூறுவோம். வின்ஸ்டன் தூக்கி எறியப்பட்ட, கவனிக்கப்படாத காலணிகளை கண்டால், சாதாரணமாக அந்தத் திசையில் வளைந்து, அதை எடுத்துவிட்டு, யாரும் பார்க்காத நேரத்தில், மெதுவாக நடந்து செல்வான். கதவைத் தாண்டும்வரை தன்னை எவரும் பார்க்கவில்லை என்று அறிந்துகொண்டால், வின்ஸ்டன் உங்கள் காலணிகளை எடுத்துக்கொண்டு மெதுவாக செல்கிறான் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

 

 சில சமயங்களில் "தேவன் நம் கடந்தகால பாவத்தை கண்டுகொள்ள மாட்டார்" என நாமும் தந்திரமாக நடக்கிறோம் என்பது தெளிவான ஒன்று. அவர் கவனிக்கமாட்டார் என்ற நினைவில் நாம் வஞ்சிக்கப்படுகிறோம். இது பெரிய விஷயமில்லை, "அது" எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நம்மை நாமே பகுத்தறிகிறோம். ஆனால், வின்ஸ்டனைப் போன்றதான இந்நடவடிக்கைகள் தேவனைப் பிரியப்படுத்தாது என்பதை நாம் நன்கு அறிவோம்.

 

தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளைப் போல, நம் பாவத்தின் அவமானத்தின் காரணமாக நாம் அப்பாவங்களை மறைக்க முயற்சிக்கலாம் (ஆதியாகமம் 3:10) அல்லது எதுவுமே நடக்காதது போல் நடிக்கலாம். ஆனால் வேதாகமம் மிகவும் வித்தியாசமான ஒன்றைச் செய்ய நம்மை அழைக்கிறது: தேவனின் இரக்கத்திற்காகவும் மன்னிப்பிற்காகவும் அவரிடம் ஓட சொல்கிறது. நீதிமொழிகள் 28:13 நமக்குச் சொல்லுகிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று

 

நம் பாவத்தை யாரும் கவனிக்கவில்லையென்று, அதை நாம் செய்யாதது போல் தந்திரமாக நடக்க முயற்சிக்க வேண்டியதில்லை. நம் தவறுகளைப்

பற்றிய உண்மையை நம்பகமான நண்பரான தேவனிடம் சொல்லும்போது, இரகசியப் பாவச்சுமையிலிருந்தும், குற்ற உணர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் விடுதலை பெறுவோம் (1 யோவான் 1:9).

தேவன் அருகில் இருக்கிறார்

மது வேகமான எப்போதும் மாறிவரும் உலகில், வழிகாட்டுதலையும், நோக்கத்தையும் கண்டறிவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். குழப்பங்களுக்கு மத்தியில், கிறிஸ்துவிலுள்ள நம்பிக்கை நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. ஏனென்றால் விசுவாசிகளாகிய நாம், வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஆவியானவரால் வழிநடத்தப்பட அழைக்கப்படுகின்றோம். தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக, ஆறுதலளிப்பவராக இருக்கிறார் என வேதம் நமக்குக் கற்பிக்கிறது. பரிசுத்த ஆவியின் உள்ளார்ந்த பிரசன்னத்தின் மூலம், நாம் தேவனுடன் ஒரு ஆழமான மற்றும் நெருக்கமான உறவை அனுபவிப்பதன் மூலம், நம் அன்றாட வாழ்வில் அவர் நம்மை வழிநடத்த…